Wednesday, January 26, 2011

உலகம் பஞ்சத்தை எதிர்கொள்ளாதிருக்க உடனடி நடவடிக்கை தேவை

பிரித்தானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் பன்நாட்டு நிபுணர்கள்
குழுவினரால் கடந்த இருவருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்
முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையானது, இன்னும் இருபது வருடங்களில் உலகளவில் ஏற்படவிருக்கும் பஞ்சத்தை தடுப்பதற்கு உலக உணவுற்பத்தியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய செயற்திட்டங்களுடனான உடனடி நடவடிக்கைகள் தேவையென வற்புறுத்தியுள்ளது.
மேலும் இவ்வறிக்கையில் இப்பஞ்சத்தை ஏற்படுத்தவிருக்கும் முக்கிய
காரணிகளாக உலக சனத்தொகை அதிகரிப்பும், மக்கள் நகரங்களை நோக்கி முண்டியடித்துக்கொண்டு குடியேறுவதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இக்காரணிகளினால் உலக மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, குடிதண்ணீர், மற்றும் சக்தி போன்றவைகளின் வழங்கலில் ஏற்படப்போகும் பற்றாக்குறை, இப்பஞ்சத்தை உண்டாக்குமென நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
   
இருபது வருடங்களின் பின்னர்தானே எனப்பொறுத்திருக்காமல் உடனடியாக உலகநாடுகளுக்கிடையேயில் ஒருங்கிணைந்த செயற்திட்டங்கள் உலகளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளனர். முக்கியமாக உணவு வீணாவதை தடுக்கக்கூடிய, மற்றும் சிறியளவிலான உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் பெரியளவில் அறுவடையை பெற்றுக்கொள்ளக்கூடிய, வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

COURTESY : SHORTNEWSGOOGLE.BLOGSPOT

Monday, January 24, 2011

ஜனவரி - 19 கையழுத்து இயக்கம்

Signature drive to save insurance industry

STAFF REPORTER
SHARE  ·   PRINT   ·   T+  
TAKING THE LEAD: MDMK Tirunelveli city district secretary K.M.A. Nizam signing the banner in Palayamkottai on Wednesday. — Photo: A. Shaikmohideen
TAKING THE LEAD: MDMK Tirunelveli city district secretary K.M.A. Nizam signing the banner in Palayamkottai on Wednesday. — Photo: A. Shaikmohideen
THE HINDU- DATED 21.01.2011

People from various walks of life participated in the ‘Save nationalised insurance industry' signature campaign that commenced at Palayamkottai on Wednesday.
After Mayor A.L. Subramanian formally launched the campaign in front of LIC Divisional Office at Palayamkottai, public and the political personalities including Tirunelveli city district secretary of Marumalarchi Dravida Munnetra Kazhagam K.M.A. Nizam put their signature on the banner.
Senior Divisional Manager, LIC, Tirunelveli Division, M.K. Karuppiah and others participated in the campaign.

பிரதமரை, காங்கிரஸ் கட்சி வாடகைக்கு எடுத்துள்ளது



பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. மறுபுறம் ரயில்வே சரக்கு கட்டண உயர்வால் டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையும் உயரும் அபாயம் உள்ளது. விலைவாசியை சந்தைதான் தீர்மானிக்கும் என்ற அரசின் தவறான கொள்கையால் விரல்விட்டு எண்ணக்கூடிய சில முதலாளிகள் மட்டுமே பயனடை கின்றனர்.

மத்திய அரசு உள்நாட்டு மக்களை பற்றி கவலைப் படாமல் இந்திய சந்தையை உலகச் சந்தையோடு இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதற்காக உலக வங்கியும், அமெரிக்க முதலாளிகளும் சிபாரிசு செய்த பிரதமரை காங்கிரஸ் கட்சி வாட கைக்கு எடுத்துள்ளது.
டாடா, அம்பானி கம்பெனி முதலாளிகளின் பினாமியாகவே உள்ளார்.
உணவுக் கிடங்குகளில் தேங்கி கிடக்கும் தானியங்களை எலிகளுக்கு தின்னத் தருவோமே தவிர, பசியால் வாடும் இந்திய ஏழைமக்களுக்கு அதிலிருந்து ஒரு பிடிகூட எடுத்துத் தரமுடியாது என்கிறார்.
கருப்பு பணம் ஸ்சுவிஸ் வங்கியில் போட்டுள்ள திருடர்களின் பட்டியலை வெளியிட முடியாது அதை நீதிமன்றம் கூட கேட்க கூடாது என்கிறார்.
முன்று முறை தேர்தலில் ஓட்டுபோடதவர்
தேர்தலில் மக்களை சந்திக்காதவர்
இந்திய குடியுரிமை இல்லாமால் இருந்தவர்
எனவே தான், இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளை பற்றி அறியாமல், ஏழை எளிய மக்களை கண்டு கொள்ளாமல் உள்ளார்.
அனைவருக்கும் இல வசக் கட்டாயக் கல்வி கொடுப் பது என்ற தனது கடமையை அரசு கைகழுவி வருகிறது. காசு இருப்பவர்களுக்கே கல்வி, மருத்துவம் என்று செயல்படுகிறது. அனை வருக்கும் பாதுகாக்கப் பட்ட சுத்தமான குடிநீர் வழங்காததும் இதன் வெளிப் பாடுதான்.

கடுமையான விலையேற்றம், மின்வெட்டு போன்றவை மக்களை கடுமையாக பாதிக்கிறது. விசைத்தறி தொழில் முடங்கிப்போய் உள்ளது. ஆனால் பஞ்சு ஏற்றுமதி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2012ம் ஆண்டிலும் மின்வெட்டு பிரச்சனை தீராது. விலை வாசி உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் கூட வாழ முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. மானியம் கொடுப்பதால் மட்டும் பிரச்சனை தீராது.

சென்னை நகரில் ஆங் காங்கே சாலைகள் தோண் டப்படுவதும், சாலையே இல்லாத தெருவில் நடை மேடை கட்டுவதும் எதனால்? தனது கட்சியின் முன்னணி ஊழியர்களை பணக்காரர்களாகவும், ரவுடி களாகவும் மாற்றும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. அதன்விளைவுதான் சிபிஎம் தலைவர் வெட்டிப்படு கொலை செய்யப்பட்டது.

சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்தால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது. அதனை செய்ய மத்திய அரசு மறுக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் தவறான நடவடிக்கைகள் ஏழை எளிய மக்களை பாதிக் கிறது. மக்களுடைய கோபம் தான் ஆட்சியாளர்களை அடிபணியச் செய்யும்.
நன்றி :  டி.கே.ரங்கராஜன்

Wednesday, January 19, 2011

இன்சூரன்ஸ் தேசிய மய நாள் - ஜன 19

The day we never forget
On the night of January 19, 1956, the then Union Finance Minister, C.D. Deshmukh, announced the nationalisation of the life insurance business, and said that the nationalisation of life insurance was a step further towards the effective mobilisation of people's savings.

 cd_deshmukh.jpg
                                                                                                C.D.Desh Mukh


nehru.gif 
– Jawaharlal Nehru.


Insurance Nationalisation Day.JPG 
LIC – a perfect jewel
“ What an extraordinary and marvelous organization LIC is…like no other – a perfect jewel ! – These were the glowing tributes paid by Prof. Noel Machado while concluding his research paper on LIC.
Prof. Noel, a visiting Professor associated with Tata Institute of Social Sciences and other reputed institutions in not the first person to recognize the greatness of our institution. Nor, we are sure, he would be the last.  Even the former Union Finance Minister P.Chidambaram had to acknowledge that LIC is a jewel in the crown. But what distinguishes prof.Noel from others is his unhesitating acknowledgement that LIC today is a marvelous organization because of the unimaginable commitment and hard work of its employees.
It is a matter of pride to all of us that today LIC has emerged as one of the premier financial institutions of the country. From 1956 till now, LIC has invested a whopping Rs.6,49,808 crores in nation building activities. While it contributed Rs. 184 crore to the 2nd Five Year Plan (1956-61), its contribution to 10th Five Year Plan (2002-2007) is Rs.3, 94,779 Crores and in the first two years of 11th Five Year Plan (2007-2009) up till now it has contributed Rs.2,18,510 Crores.  On its initial investment of Rs.5 crores in the year 1956 the Union Govt. has received Rs.1031 Crore as its share of the valuation surplus for the year ending 31st March 2010.  The total accretion to the Govt.’s kitty on this score alone adds up to Rs.8,957.40 Crore since inception. Even after one decade of opening up of the insurance sector, LIC remains the undisputed market leader holding on to a market share of 73.02 percent in number of policies and 70.12 percent in new business premium.  The LIC has also an impressive share of 87.4% in the total assets under management.  Insurance is a promise which needs to be fulfilled on the happening of eventuality. LIC settles 99.86% of the claims which is a world record. The track record of the private insurance companies on settlement of claims is abysmally low. The Compounded Annual Growth Rate (CAGR) of LIC during the last ten years has jumped to 30.24% from 15.23% since inception.   LIC’s total policies have risen from 10.12 Crores to 32 Crores.  LIC’s Life fund has grown from 1.54 lakh crore to 9.99 lakh crore.  LIC’s asset base has grown from 1.60 lac crore to 12 lakh crore by September 2010.   The new business premium which was Rs.5930 Crore in 2000 had reached Rs. 70891 Crore. Our Total Premium Income which was Rs.27489 Crore in 2000 has reached 1, 85,986 Crore. Thus, through this amazing performance, LIC has retained it’s domination over the market. 
On the other hand, the performance of private insurance companies is far from satisfaction. Out of the 21 private insurance companies, 14 have reported operating losses and majority of them are yet to break even. More than 90% of the policies sold by private companies are ULIPs in which the risk is borne by the policy holder and the insurance companies earn their income through charges without undertaking any risk. The Economic Survey 2010 notes that in the infrastructure investment made by insurance companies as at the end of 2007-08, the public sector had a share of 94.3%.  During the period 2005-2009, the public sector invested Rs.51252.9 crore and the private sector Rs.5850.5 crore in infrastructure sector. During this period, the private sector had a market share of around 30-35% in the new premium incomes while their share of investments in infrastructure was just around 10 percent.  Commenting on this, the Economic Survey notes that “the private sector insurance companies are yet to make large scale investments in the infrastructure sector”. 






 


The insurance employees organized under the banner of AIIEA are committed to strengthen the public sector insurance industry and to the cause of 34 crore policyholders of LIC of India.  AIIEA demands the Government of India to drop the moves to increase the FDI cap in insurance industry and also to increase the capital base of LIC from 5 Crore to 100 Crore (which paves way for disinvestment of LIC).    AIIEA also demands the Government of India to take all the steps to further strengthen the Public Sector LIC.






 




protect Nationalised Insurance Industry.JPG
COURTESY : GEE VEE BLOGSPOT.COM

The LIC continues its amazing domination with a market share of 72.01% in new premium and 73.45% in number of policies as on 30.11.2010.
In this scenario and also in spite of the sterling performance of the Life Insurance Corporation of India, the government, under pressure from the international finance capital, is making attempts to weaken the public sector.  The two legislations that are pending in the parliament, the Insurance Laws (amendment) bill 2008 which seeks to increase the FDI cap in insurance from 26% to 49% and the LIC Act (amendment) Bill 2009 which seeks to increase the capital base of LIC from Rs. 5 Crores to 100 crores are steps to weaken public sector LIC.


The nationalisation of life insurance is an important step in our march towards a socialist society. Its objective will be to serve the individual as well as the state. We require life insurance to spread rapidly all over the country and to bring a measure of security to our people.

“ The Nationalisation of Life Insurance will be another mile stone on the road of Country has chosen in order to reach its goal of a socialistic pattern of society. In the implementation of the Second Five Year Plan, it is found to give material assistance.  In to the lives of millions in the rural areas, it will introduce a new sense of awareness of building for the future in the spirit of calm confidence which Insurance can alone give.  It is a measure conceived in a genuine spirit of service to the people.  It will be for the people to respond, confound the doubters and make it a resounding success”

Sunday, January 16, 2011

மாண்டேக் சிங் அலுவாலியா!



இத்தனை நாள் அரசியல் வாதிகள் 2G விஷயத்தில் ஊழலே நடக்கவில்லை என்று சாதித்தது போதாது என்று இப்போது இவரும் இதற்கு ஒத்து ஊதுகிறார்! 

இதில் இவர் சொன்ன ஒரு முக்கியமான விஷயம் SWAN மற்றும் UNITECH கம்பனிகள் பாதிக்கும் கீழான பங்கை ஏகப்பட்ட விலைக்கு விற்ற குற்றச்சாட்டிற்கு பதில் சொல்லியிருக்கிறார். இவர் சொல்வது, அந்த அதிக பணம் promoter களுக்கு தரப்படவில்லை. அந்த கம்பெனியிலேயே இருக்கிறது. இது வேறு. பணம் கொடுத்து பங்கு வாங்குவது வேறு என்று. 

ஒரு கடை நடத்துகிறீர்கள். ஒரு வருடம் கழித்து வேறொருவர் பங்கு தாரராக சேர வருகிறார். கடையின் அப்போதைய மதிப்பில் பாதியை அவரை தர சொல்லி அவரை பாதி பங்குதாரராக்கி கொள்கிறீர்கள். அப்போது அவர் கொண்டு வந்த பணத்தை உங்களிடம் கொடுக்காவிட்டாலும் அதன் மீது உங்களுக்கு உள்ள உரிமை எப்போதும்  உண்டு. அதை யாரும் மறுக்க முடியாது. 

சேரும்போது கொடுக்கும் பணம் அந்த கம்பனியின் அன்றைய மதிப்பின் படி கொடுப்பது. கொடுத்தபின் இந்த மாதிரி கதை விடுவது மக்களை முட்டாளாக்கும் முயற்ச்சியே!

ஒன்று மட்டும் முழுமையாக தெரிகிறது. காங்கிரஸ்ஸின் பங்கு கைக்கு வந்து விட்டது. பூசணிக்காயை முழுமையாக மறைக்க பார்க்கிறார்கள். 

மாண்டேக் போன்றவர்களுக்கு பாரதி அன்றே சொன்னான், படித்தவன் சூதும் பாவமும் பண்ணினால் ஐயோ என்று போவான் என்று!

மகளிர் மாநாட்டு விளம்பர பேனர்கள்









 திருநெல்வேலி  கோட்டத்தின் அனைத்து மகளிர் தோழர்களின்
சங்கமமாக ஐந்தாவது மகளிர் மாநாடு அமையட்டும்.
புறப்படுவீர் வேலூர் நோக்கி! 

இரையாக வேண்டியது நாமல்ல - ஆர்.எஸ்.செண்பகம்

அக்டோபர் 29ம் தேதி கோயம்புத்தூர் நகரில் முஸ்கின் மற்றும் அவளுடைய சகோ தரன் ஹிருத்திக் ஆகியோர் கால் டாக்சி டிரைவர் மோகனால் கடத்தப்பட்டு அந்த பெண் குழந்தை பாலியல் வன்முறைக்குட் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாள். அவளுடைய சகோதரனும் கொலை செய்யப் பட்டுள்ளான். மோகன் என்பவருக்கு ஒரு தனியார் வங்கியில் ரூ. 2 லட்சம் கடன் இருந் துள்ளது. இந்தத் தொகையை எளிதில் பெறு வதற்கு துருப்புச் சீட்டாக இந்த குழந்தை களை கடத்தியுள்ளார் என்று பின்னர் காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு முடிவதற்குள்ளேயே சென்னை யில் மற்றுமொரு நிகழ்வு, இதில் கடத்தப்பட்ட கீர்த்திவாசன் என்ற அந்த சிறுவன் தமிழகக் காவல் துறையினரால் உயிருடன் மீட்கப்பட் டுள்ளான். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி களில் ஒருவரான விஜய குமார் என்ற இன் ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ., படித்த பட்டதாரி, இவருக்கும் இவருடைய நண்பர் பிரபு என்ற மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்த டிப்ள மோ பட்டதாரி இளைஞருக்கும் தொழில் துவங்க மிகப்பெரிய அளவில் பணம் தேவைப் பட்டுள்ளது.

இந்த இரண்டு வழக்குகளிலும் குற்ற வாளிகள் ஏற்கனவே ஏதோ ஒரு வகையில் குழந்தைகளுக்கு அறிமுகமானவர்களாக அல்லது குழந்தைகளைப் பற்றி, அவர்களது குடும்பங்களைப் பற்றி, அவர்களது நடவடிக் கைகளைப் பற்றி அறிந்தவர்களாக இருந்தனர் என்பது நாம் கவனிக்கத்தக்கது. இவை யெல்லாம் பத்திரிகைகளில் செய்தியாக வந்த போது பெற்றோர்கள் மத்தியிலும் குழந்தைகள் மத்தியிலும் ஒரு அச்சத்தை கிளப்பிவிட்டுள் ளது. ஆனால் 1998 முதலே (இது போன்ற சம் பவங்கள் அதிகரித்த காலகட்டம் என்ற வகையில்) பள்ளிகளிலும். பள்ளிசெல்லும் வழிகளிலும் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்குட்படுத் தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் ஆசிரியர்களால், சக மாணவர்களால், குழந் தைகளுக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆனவர் களால் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய குற்றங்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது என்பதும் சமூக ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிகழ்வுகளை “சம்பவங்கள்” என்று சாதாரணமாகச் சொல்லி விட முடியாது. இந்த வன்முறைகள் அரங்கேறிய இடங்களும், சூழ்நிலைகளும், பல் வேறு கேள்விகளை நம் முன்னே (பெற் றோர்கள் என்ற முறையிலும், இந்த சமூகத்தின் பிரஜைகள் என்ற முறை யிலும்) எழுப்பியுள்ளது.

நாம் நம் பிள்ளைகளுக்கு குழந்தைகள் உரிமை பற்றிய விழிப்புணர்வை தகுந்த வய தில் தகுந்த வகையில் ஏற்படுத்தியிருக் கிறோமா? சமுதாயப் புறச்சூழலை அவர் களை புரிந்து கொள்ளச் செய்துள்ளோடு சமு தாயச் சீர்குலைவுகளையும் அவற்றிலிருந்து விடுபடும் முறைகளையும், தற்காப்பு நடவடிக் கைகளையும் அறிவுறுத்தி இருக்கிறோமா? அதேபோன்று சிறந்த கல்வி தரும் பள்ளி என்று உயர்ந்த மதிப்பெண்களை எடுக்க வைக்கின்ற பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் பெற்றோர்கள் அந்த பள்ளிகளில், பள்ளி செல் லும் வழிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் நடைமுறைகள் உள்ள னவா என்பதையும், மாணவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தும் திட்டவட்ட மான செயல்முறைகள் உள்ளனவா என்பதை யும் கவனிக்கிறோமா? இதையெல்லாம் நாமும் செய்ய வேண்டியுள்ளது, பள்ளிகளும் கவனிக்க வேண்டியுள்ளது, பெற்றோர்- ஆசிரியர் பங்களிப்பும் அவசியமாகிறது. சமூக ஆர்வலர்கள் இன்னும் ஒரு படி மேலான சிந் தனையுடன் நாம் யோசிக்க வேண்டிய மற்று மொரு விஷயத்தையும் முன் வைக்கின்றனர். குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - 2005 பள்ளிகளில் குழந்தைகளுக்கு உரிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதும். ஒரு குழந்தை பள்ளிச் சீருடையில் வீட்டை விட்டு வெளியே வரும் நொடி முதல் அந்த குழந்தையின் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகத்திற்கும் பொறுப்புள்ளது என்பதுமே அவர்கள் முன் வைக்கின்ற கருத்து.

இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகள் சமூக சீர்கேடு களுக்கு மிக எளிதாக இரையாகின்றனர் என்பதுதான் வேதனை தரும் விஷயமாக உள்ளது. பெண்களுக்கும், வயோதிகர்களுக் கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பினை தர வேண்டிய நமது அரசாங்கம் இந்த பிரச்ச னைகளின் ஆணி வேரினை கண்டறிய வேண் டும், பிரச்சனைகளுக்கான காரணிகளை வேரடி மண்ணோடு களைய வேண்டும்.

கட்டுரையாளர், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு, நெல்லை மாவட்ட அமைப்பாளர்.
மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் திருநெல்வேலி கோட்ட சங்க இணை செயலாளர். 

Wednesday, January 5, 2011

நந்தன் புகுந்த பாதை ! - (வரலாறு தொடரலாமா?)



சைவ மரபில் அதன் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த பல கோவில்கள் தமிழகத்தில் இருப்பினும் இருப்பினும் சிதம்பரம் நடராசர் ஆலயம் மட்டுமே கோயில் என்று குறிக்கப்படுகிறது. அதாவது கோயில் என்றால் அது நடராசர் அலயம்தான். இந்த கோயில் குறித்த பல விவாதங்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஆலையத்தினுள் தமிழில் தேவாரம் திருவாசகம் பாட அனுமதிகோரி தமிழ் அன்பர்கள் இராம.ஆதிமூலம் உள்ளிட்டோர் துவக்கிய நாற்பது ஆண்டுகளுக்கு மேலான பொராட்டம் வெற்றி அடைந்த சூழலில் அந்த ஆலயத்தை அரசாங்கம் இந்து அறநிலையதுறையின் கீழ் எடுத்துள்ளது. எடுத்தது வழக்காக நீதிமன்றத்தில் உள்ளது. தற்போது அந்த ஆலையத்தின் தெற்குரத வீதியின் கோபுரத்திற்கு நேராக உள்ள கதவு கற்களால் அடைக்கப்பட்டுள்ளது. இந்த கதவடைப்பு நடைபெற காரணம் அவ்வழியாக நந்தனார் என்ற தலித் பகதன் வந்ததே, எனவே அந்த பாதையை உடனே திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மற்றொருபுறம் இந்த கோவிலின் தற்போதைய அமைப்பே 12 ஆம் நூற்றாண்டில் வந்ததுதான் அப்போது இந்த சுவரே கிடையாது பின்பு நான்காம் நூற்றாண்டில் நந்தன் எப்படி அவ்வழி வந்திருக்க முடியும் என்கின்றனர். சுவர் வேண்டுமானால் பின்பு வந்திருக்கலாம் தெற்குதிசை மாற்றம் அடைந்திருக்காது அல்லவா? ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும் சிதம்பரம் பகுதியை சுற்றி உள்ள உழைப்பாளி மக்களின் உதிரத்தில் உதித்த இந்த கோயில் பல நூற்றாண்டுகள் பழைமையானது என்றாலும். 1947 க்கு பிறகுதான் இந்த ஆலையத்தினுள் தலித் மக்கள் நுழைய முடிந்தது. 1932 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆலயநுழைவு அறைகூவலை எற்று சுவாமி சகஜானந்தா தலைமையில் சிதம்பரம் ஆலையநுழைவு போராட்டம் நடந்த போது மேலரதவீதியில் கடுமையாக தாக்கப்படுகின்றனர். அதன் பின் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்புதான் அங்கு அவரது தலைமையில் அந்த பொராட்டம் வெற்றி அடைந்தது. 

    காவிரியின் கிளை நதியான கொள்ளிடத்தின் சதுப்பு நிலங்கள் நிறைந்த தெற்குபகுதியில் அமைந்துள்ள நகரம் சிதம்பரம். சிதம்பரம் நகராட்சி தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் பழைமை வாய்ந்த நகராட்சியாகும். 33 வார்டுகளும், கிட்டதட்ட ஒரு லட்சம் மக்கள் தொகையும் கொண்ட சிதம்பரம் நகராட்சி 1873 ஆண்டு அமைக்கப்பட்டத்தாகும். ஒருகாலத்தில் தில்லை மரங்கள் அடர்ந்த காட்டுபகுதியாக இருந்த இடம் இது. புலிகள் அதிகம் இந்த காடுகளில் வசித்ததால் இந்த பகுதி பெரும்புலியூர் என்றும் தில்லை என்றும் அழைக்கப்படுகிறது. ஆகாய வடிவமாக இத்தலம் திகழ்வதால் ஞான ஆகாசம் என்றும் கூறப்படுகிறது. இவாகாசம் பூத ஆகாசம் போல் சடம் ஆகாது. சித்தாகவிலங்குவதால் சித் + அம்பரம் = சிதம்பரம் எனும் பெயர் பெற்றது. மற்றும் புண்டரீகபுரம், தளியூர் என்ற சிறப்பு பெயர்களும் உள்ளது. மக்கள் சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கை நிகழ்வுகளை கடவுள் சக்தி என்று நம்பிய அன்றைய மக்கள் அந்த சம்பவம் நடைபெறும் இடங்களில் கடவுள் வந்திருப்பதாக நம்பினர். அந்த இடத்தில் குடிசை அமைத்து வனங்கினர். குடி இருத்தல் என்றால் தெய்வம் தங்கி இருக்கும் இடம் என்று அர்த்தம். கோயில், கோட்டம், மன்றம் என்பவையெல்லாம் பிற்கால பெயர்கள். குடியென்பதே பழம் பெயர். தொல் திராவிட மொழியில் கோயில் குடி என்றே உள்ளது. இன்றும் கன்னடத்திலும், தெலுங்கிலும் கோயிலை குடியென்றே அழைக்கின்றனர். குடியின் மீது ஓலையால் வேயப்பட்ட இடத்தை குடிசை என்றழைத்தனர். இன்றும் பழமை மாறாமல் குடிசை வடிவிலேயே சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலம் எனும் மைய மண்டபம் உள்ளது. கோயிலின் கூரையில் பொன்வேய்ந்து பிற்காலத்தில் எத்துனையோ மாற்றங்கள் வந்த பின்பும் பொன்னம்பலத்தின் குடிசை அமைப்பு மட்டும் மாறவே இல்லை. சிதம்பரம் கோவிலின் தொன்மைக்கு இது சான்றாக நிற்கிறது.

    தொன்மைவாய்த கோயில் என்றாலும் இக்கோயில் குறித்து சங்க இலக்கியங்களில் எந்த குறிப்பும் காநப்படவில்லை. சோழ வம்சத்தின் கடைசி மன்னனாக கருதப்படும் கோச்செங்கட் சோழன் பிறப்பதற்காக வேண்டி அவனது தாய் தந்தையர் சிதம்பரத்திற்கு வந்து வழிபட்டதாகவும், கோச்செங்கட் சோழன் சிதம்பரம் கோவிலை செப்பனிட்டதகவும், நகரைச் சீர்திருத்தி அமைத்தாகவும் பெரியபுராண செய்திகள் உள்ளன. கி.பி 2 ஆம் நூற்றாண்டு முதல் 4 ஆம் நூற்றாண்டுவரை எந்த செய்தியும் கிடைக்கவில்லை. பின் 5 ஆம் நூற்றாண்டில் திருமூலரின் திருமந்திரத்தில் இக்கோயில் குறித்த குறிப்புகள் உள்ளது. கி.பி 6 ஆம் நுற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் சிதம்பரத்திற்கு வந்து வழிபட்டுள்ள செய்தி இருக்கிறது. 7 ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசுவும் கோயிலுக்கு வந்துள்ளனர். 7 ஆம் நூற்றாண்டுக்கு பின்பு இக்கோவிலின் வரலாறு முழுமையாக கிடைக்கிறது. இது ஒரு புறம் இருக்க நந்தனார் பிரச்சனையையும் காலகாலமாய் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது. அதன் பிறகு கோயில் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைகிறது. 

     கிழக்குக் கோபுரம் இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி 1138-1150), பின்பு காடவர் கோன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனால் முடிக்கப்பட்டது. தெற்குக்கோபுரம் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனால் கி.பி 1237-40 காலத்தில் கட்டப்பட்டது. மேற்குக்கோபுரம் எழுநிலையுடன் முதல் ஜடவர்ம பாண்டியனால் கி.பி 1207 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. வடக்குக் கோபுரம் எழுநிலையுடன் தனது ஒரிசா போர்களத்தின் வெற்றியின் நினைவாக விஜயநகர பேரரசன் கிருஷ்ணதேவராயனால் கட்டப்பட்டது. சோழர்கள், பாண்டிய மன்னன், என பலரும் இந்த கோவிலை விரிவாகம் செய்து 12 ஆம் நுற்றாண்டில் தற்போது உள்ள நிலைக்கு ஆலையம் வந்தது.
     "புண்பலை நோய் தீண்டப்பெற்ற புறத்திருதொண்டன் நந்தன்" என 8 ஆம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பியும், "செம்மையே திருநாளைப் போவதற்கும் அடியேன்" என்று 12 ஆம் நுற்றாண்டில் பெரியபுராணம் என்கிற திருத்தொன்டர் புராணத்தில் சேக்கிழாரும், 1861 இல் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில் கோபாலகிருஷ்ன பாரதியும் நந்தன் குறித்து பேசி உள்ளனர். இந்த இலக்கியங்களில் நந்தன் சிவனை வழிபட வந்து  நந்தன் சாம்பலானான் என்கிறது. பெரியபுராணம் நந்தன் சிதம்பரத்தின் தெற்கு எல்லையில் உள்ள ஓமகுளத்தில் (ஹோம குளம்) நெருப்பில் இறங்கி பிராமணனாக மாறி சிவனடி சேர்ந்தார் என்று கூறுகிறது. கோபாலகிருஷ்ன பாரதி நந்தன் தெற்குவாயில் வழியாக ஆலையத்தினுள் நுழைந்தான் அதனால் மடிந்தான் என்று கூறுகிறார். இந்த பழம் பெரும் சான்றாதரங்களை வைத்துதான் அந்த ஆலையத்தின் தெற்கு வாயில் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனல் நந்தன் இவ்வழியே வரவில்லை என்றும் பல கதைகள் உள்ளது.
    கதை 1: கி.பி 1798 இல் தஞ்சை வேதநாயக சாஸ்திரிகளால் தொகுக்கப்பட்ட சுவடிகள் (தமிழக அரசின் கீழ்திசைச் சுவடிகள் நூலகம் சார்பில் பதிப்பிக்கபட்டுள்ள இடங்கை வலங்கையர் வரலாறு என்று நூலாக வெளிவந்துள்ளது) நந்தன் குறித்து கூறும் கதை வேறு விதமானது. இராவணனின் வாரிசுகளில் ஒருவராகச்சொல்லப்படும் தியாகச்சாம்பானுடைய மகளுக்கும் சோழராசாவுக்கும் பிறந்த நந்தன் ஒரு சோழமண்டல அரசன். தியாகச்சாம்பான் ஒரு தலித் என்பதால் நந்தனும் அப்படியே அறியப்பட்டடான். நந்தனுக்கு ஒரு வெள்ளாள சாதியை சார்ந்த பெண்ணை மணம் முடிக்க நினைத்ததால் பிரச்சனை துவங்கியது. தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு தங்களது பெண்ணை திருமணம் முடிக்க ஆதிக்கசாதியினர் தயாரில்லை. ஆனால் அதிகாரத்தில் உள்ள நந்தனை எதிர்க்கவும் துணிவில்லை. எனவே பெண் பார்க்க நந்தனை தனது சாதி சனத்துடன் வரச்சொல்லி, கம்மாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கொலைசெய்ய தூண்டுகின்றனர். அப்படியே பெண்பார்க்க வந்த நந்தனையும் அவனது சுற்றத்தாரையும் கம்மாளர்கள் உதவியுடன் வெள்ளாளர்கள் பந்தலில் சூட்சுமம் செய்து படுகொலை செய்கின்றனர்.
    கதை 2: 1910 ஆம் ஆண்டில் அயோத்திதாச பண்டிதர் தமிழன் ஏட்டில் "இந்திரர் தேச சரித்திரத்தில்" என்ற தொடரில் நந்தன் குறித்து வேறு விதமாக எழுதியுள்ளார். புன நாட்டின் வடக்கே வாதவூரெனும் தேசத்தை அரசாண்ட விவேகம் மிக்க மன்னன் நத்தன். இவன் பவுத்த நெறி நின்று அரசாண்ட மன்னன். இவனது நாட்டிற்கு பக்கத்தில் உள்ள சோணா நாட்டில் வேஷபிராமணர்கள் ஒரு சிவாலயத்தை கட்டி மக்களையும், மன்னர்களையும் ஏமாற்றி வந்தனர். நந்தனின் புகழை அறிந்து அவனை ஏமாற்ற புத்ததுறவிகள் போல வேடமிட்டு நந்தனை கான வந்தனர். ஆனால் அவர்கள் பொய்வேடம் கலைந்து நாட்டைவிட்டு விரட்டப்படுகின்றனர். அப்படி ஓடியவர்கள் தங்கள் அவமாணம் வெளியே தெரிந்தால் தங்கள் பிழைப்பு பாதிக்கப்படும் என்று அஞ்சினர். நந்தன் அரணமனைக்கு மேற்கே அரைக்காத தூரத்தில் தில்லை மரங்கள் அடர்ந்த ஒரு காட்டில் மண்மெட்டை தோண்டி அதன் மத்தியில் கல்லால் ஆன தூண்களை வைத்து பழைய கட்டடம் உள்ளதுபோல அமைப்பை ஏற்படுத்தி அதன் மத்தியில் காலை வைத்தால் விழும் அடிப்படையில் சூழ்ச்சி செய்து மன்னனை அழைத்து பார்வை இடச்சொல்கின்றனர். அப்படி சென்ற நந்தன் அந்த சூழ்ச்சியில் சிக்கி கொலைசெய்யப்படுகிறான்.
    கதை 3: (நந்தி கலம்பகம்) ஒரு ராசா இருந்தார். அவருக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் மூலமாக ஏழு பிள்ளைகள் பிறந்தனர். அந்த ராசாவுக்கு ஒரு வைப்பாட்டி இருந்தாள். அவள் மூலம் பிறந்த ஆண் பிள்ளைதான் நந்தி. அந்த ராசா தன்னுடைய வைப்பாட்டி மகனான நந்திக்கு முடிசூட்டினான். அவன் மன்னனான சிறிது காலத்திற்கு பிறகு தந்தை இறந்தான். பின் நந்திராசா அந்த முதல் தாயையும் ஏழு பிள்ளைகளையும் கொடுமைசெய்தான். அதனால் அவர்கள் திருடி பிழைக்க முடிவு செய்தனர். நந்தியின் அரணமனையிலேயே திருட்டை துவக்கினர். திருடச்சென்ற முதல் ஆறுபேரையும் நந்தி தலையை வெட்டிக்கொன்றான். ஏழாம் பிள்ளை தப்பிசென்று ஒரு கவிராயனிடம் சேர்ந்தான். அவனிடம் வித்தைகளை கற்றுக்க்கொண்டு     நந்தி கலம்பகம் என்ற 100 பாடல்களை இயற்றினான். இது நந்தியை புகழ்வது போல இருப்பினும் இந்த பாடல்களை கேட்டு முடிக்கும் போது நந்தி மரணமடைவான். அப்படியே நடந்தது.
     காலத்தால் மிகவும் பின்பு உருவாக்கப்பட்ட இந்த மூன்று கதைகளில் நந்தன் கூலி தொழிலாளி இல்லை மன்னன் என்கிறது. நந்தன் குறித்து இன்னும் கதைகள் இருக்கக்கூடும். இதில் கவனிக்க வேண்டியது அயோத்திதாசர் பௌத்த மதத்தை முன்வைத்து ஒரு கதையாடலை கட்டமைக்கின்றார். அது பிராமணர்கள் பௌத்த சமண கோயில்களை இடித்து, சமணர்களை கழுவிலேற்றி படுகொலை செய்து இந்து மதத்தை ஆட்சியதிகார வன்முறையால் நிறுவியதற்கு எதிரான புரட்சிகர கதையாடல். ஆனால் அந்த கதைகான வரலாற்று சான்றுகள் எதுவுமில்லை. அடுத்து தஞ்சை வேதநாயக சாஸ்திரிகளால் எழுதப்பட்ட சுவடிகளில் சிதம்பரத்தில் நடந்த நன்தன் கதை என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை, நந்தி கலம்பகமும் சிதம்பரம் பக்கம் நடந்ததா என்பதும் ஐய்யமுடையதே. ஆக நந்தன் ஆலயமே நுழையாத போது இந்த ஆலய சுவர் இடிப்பு ஏன் என்ற கேள்விக்கு இடம் வைக்கும் இந்த கதைகளின் நோக்கம் இன்னும் ஆராயப்பட வேண்டியது.
    மேலும் ஒரு கதை 4: (எங்கள் கள ஆய்வின் போது வாய்மொழி தரவாக கிடைத்தது) நந்தன் புலைச்சேரியில் பிறக்கவில்லை. சேரியில் கீழே திடீரென கிடந்த குழந்தை. கிடந்தவனை தலித் தம்பதியினர் எடுத்து வளர்கின்றனர். நந்தன் வேறு யாருமல்ல, சிவபெருமானே அப்படி குழந்தையாக கிடந்தார். பின்பு ஓமகுளத்தருகே நெருப்பில் இறங்கி பிராமன வேடம் புண்டு ஆலயம் சென்று செரூபமாகினார். இந்த கடைசி கதை அவன் மன்னனும் அல்ல மனிதனும் அல்ல சிவனே நந்தனாக பிறந்தான் என்கிறது. இருப்பினும் சிவனே தலித்தாக வளர்ந்தாலும் பிராணர்களை எதிர்த்து ஆலயம் நுழைய தீயில் இறங்க வேண்டியுள்ளது.
    நிகழ்காலத்தில் எழுந்துள்ள ஒடுக்கப்பட்டோரின் எழுச்சியுடன் இணைந்த கேள்வி மிகவும் முக்கியமானது. தெற்குவீதியில் உள்ள வாயில் அடைக்கப்பட காரணம் தீண்டாமைதான் என்று கோரிக்கை எழும்போது அது இல்லை எனில் வேறு எந்த காரணத்திற்க்காக அந்த பாதை முடப்பட்டுள்ளது என்பதை மூடியவர்கள் சொல்லவேண்டும். ஆலயங்கள் தெய்வங்கள் இருப்பிடம் எனில் அந்த ஆலயம் அனைவரையும் அரவணைப்பதாக இருந்திட வேண்டும். ஆனால் இன்றும் தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஆலயங்களில் தலித் மக்கள் உள்ளே செல்ல கடுமையாக போராடவேண்டி உள்ளது. சமூகத்தின் பொதுவெளியில் எழுந்துள்ள கேள்விகளை அத்துனை எளிதாக யாரும் புறக்கணிக்க முடியாது...

நன்றி : மாற்று .காம்

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்

இந்த தேசத்தின் மகத்தான மனிதரின்-  காலகாலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னையும், தன் வாழ்வையும் அர்ப்பணித்துக் கொண்டவரின்- வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ஜனவரி  12 மற்றும் 13ம் தேதி திருநெல்வேலியில் வெளியாகிறது.


இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் திருநெல்வேலி கோட்டம் சார்பாக ஜனவரி - 13 -ம் தேதி மாலை 6.30
மணி காட்சி திரையடப்படுகிறது.


டாக்டர் அம்பேத்கர்!
எளிய மனிதர்களின் வாழ்வில் விளக்கேற்றிட, ஒரு மெழுகுவர்த்தியாய் வெளிச்சம் காட்டிய போராளி அவர்.
அவர் கேட்ட கேள்விகளுக்கு இன்னமும் விடையளிக்க முடியாமல் இந்த மண்ணின் மனசாட்சி தலைகுனிந்தே நிற்கிறது.
ஊடகங்களும், ஆதிக்க சக்திகளும் இந்த திரைப்படத்தை ஒரு பொருட்டாக மதிக்காது. கூடவே ஒதுக்குவதிலும், புறக்கணிப்பதிலும் தெளிவாகவும் அக்கறையாகவும் இருக்கும்.



நாம், நம்மால் முயன்ற அளவுக்கு நண்பர்களிடமும், நமக்குத் தெரிந்தவர்களிடமும் இத்திரைப்படம் குறித்துப் பேசுவோம். அவரது வாழ்க்கை கூறும் செய்திகளை தமிழகம் அறியச் செய்வோம்.


வாருங்கள், ஊர் கூடி இக்காரியத்தைச் செய்வோம். பெரும் வணிக ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தாலும் நம் இணையவெளி அம்பேத்கருக்காக ஒன்றுகூடி நிற்கட்டும்.

Tuesday, January 4, 2011

பெட்ரோல் பற்றாக்குறை ஆபத்து!



ளைகுடா நாடுகளில் சவூதி அரேபியாவிடமிருந்தும் ஈரானிடமிருந்தும் மிக அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. அரேபியாவுக்கு அடுத்து, இந்தியத் தேவையில் 12 சதவீதத்திற்கும் அதிகமாக ஈரானிலிருந்தே கச்சா எண்ணெய் கிடைத்து வருகிறது.

கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய வர்த்தகம் தொடர்பான பண பரிவர்த்தனைகளை ஈரான் தலைநகர் டெஹ்ரானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆசியன் கிளியரிங் யூனிட் (ஏசியூ) எனப்படும் நிதி பரிவர்த்தனை மையத்தின் மூலமாகவே இத்தனை ஆண்டுகளாக இந்தியா மேற்கொண்டு வந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி வங்க தேசம், பூடான், நேபாளம், பாகிஸ் தான், மாலத்தீவுகள், மியான்மர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடனான எண்ணெய் வர்த்தகம் தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தையும் மேற்கண்ட மையத்தின் மூலமாகவே ஈரான் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 23ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி திடீரென பிறப்பித்த ஒரு உத்தரவின் மூலம், இந்தியா-ஈரான் இடையிலான எண்ணெய் வர்த்தகம் தொடர்பான பணப்பரிவர்த்தனைகளை மேற்கண்ட மையத்தின் மூலமாக நடத்துவதை ரத்து செய்தது. இது இருநாட்டு எண்ணெய் கம் பெனிகளிடையே பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சீர்குலைக்கும் விதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி திடீரென இத்தகைய உத்தரவை ஏன் பிறப்பித்தது என்ற கேள்வி பெட்ரோலிய துறையினரிடம் மட்டுமல்ல, சர்வதேச அரசியல் நோக்கர்களிடையேயும் எழுந்தது.

இதற்கு அடிப்படைக் காரணம் அமெரிக்காவுடனான இந்திய அரசின் உறவே ஆகும். 2008ம் ஆண்டு வரை, டெஹ்ரானில் உள்ள ஆசியன் கிளியரிங் யூனிட் எனும் நிதி பரிவர்த்தனை மையத்தில் அனைத்து பரிமாற்றங்களும் அமெரிக்கப் பணமான டாலரிலேயே நடைபெற்று வந்தது. ஆனால் அதற்குப் பின்னர் ஈரான் மீது அணுசக்தி தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்தது. இதைத்தொடர்ந்து வேறு வழியின்றி ஆசியன் கிளியரிங் யூனிட், ஐரோப்பிய பொது நாணயமான யூரோ டாலரை தனது பரிவர்த்தனை பணமாக மாற்றிக் கொண்டது. அதற்குப்பின்னரும் கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா, ஈரானுடன் யூரோ டாலரிலேயே வர்த்தகத்தை நடத்தி வந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் தடை உத்தரவு அமலில் இருக்கும் பட்டியலில் உள்ள நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை யூரோ டாலரில் பரிவர்த்தனை செய்வது தொடர்பாக சான்று அளிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியை சமீபத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி கேட்டுக் கொண்டது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து, ஆசியன் கிளியரிங் யூனிட்டோடு நிதிப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவெடுத்தது. இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்பட அனைத்து பெரும் எண்ணெய் நிறுவனங்களும் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்துள்ளன.

இந்நிலையில் ஈரான் மற்றும் இந்தியா உள்ளிட்ட இருநாட்டு மத்திய வங்கி அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை தில்லியில் கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கான பணப்பட்டுவாடாவை எந்த வடிவத்தில் அளிப்பது என்று சுயேச்சையாக முடிவெடுக்காமல் அமெரிக்க நிர்ப்பந்தத்திற்கு பணிந்திருப்பதால், ஈரான் மத்திய வங்கி அதிகாரிகள் குழுவுடனான பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. மீண்டும் தொடர்ந்து பேசுவோம் என்று பெட்ரோலியத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மத்திய நிதித்துறை அதிகாரிகளும் இந்தப் பேச்சுவார்த்தையை தொடரப்போவதாகவும், இந்தியாவிடமிருந்து பணப்பரிவர்த்தனை நடைபெற வேண்டுமானால் இந்திய ரிசர்வ் வங்கியில் ஈரான் மத்திய வங்கி தனியாக ஒரு கணக்கை துவக்கி, அதன் மூலம் நடத்திக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளனர். ஆனால் இந்த ஆலோசனையை ஈரான் மத்திய வங்கி நிராகரித்துவிட்டது.

இந்த சிக்கல் நீடிக்குமானால் அடுத்த மாதத்திலிருந்து ஈரான் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வந்து சேராது என்ற நிலை எழுந்துள்ளது. 2009-10ம் ஆண்டில் ஈரானிலிருந்து 21.3 மில்லியன் டன் அளவிற்கு கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது. இந்த ஆண்டு 18 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட் டது. இந்த கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வருமா இல்லையா என்பது, மன்மோகன் அரசின் கையில் இருக்கிறது.

ஆசியன் கிளியரிங் யூனியன் (ஏசியு)அமைப்பின் மூலமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தங்களது பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள மத்திய அரசு தடை விதித்திருப்பது ஈரானுடனான இந்தியாவின் வர்த்தகத்தை நேரடியாக பாதிக்கும் முடிவாகும். குறிப்பாக நமது நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 16 முதல் 17 சதவீதம் வரை கச்சா எண்ணெய் ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்ற நிலையில் அந்த இறக்குமதியையும், இயற்கை எரிவாயு இறக்குமதியையும் கடுமையாக பாதிக்கும்.

ஐக்கிய நாடுகள் சபையும் ஈரானுக்கு எதிராக தடைகளை விதித்துள்ள போதிலும், எரிசக்தித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் நடைபெறும் இறக்குமதிக்கு அது விலக்கு அளித்துள்ளது. எனவே ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு உறுப்பினர் என்ற முறையில் அந்த விதிகளை மீறி இந்தியா மேற்கண்ட முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவை அறிவித்தவுடன், அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர், இது இந்தியாவின் மிக முக்கிய மான நடவடிக்கை என்று பாராட்டு தெரிவித்திருப்பது ஜீரணிக்க முடியாத ஒன்று.

இந்த விஷயங்களைச் சுட்டிக்காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேச நலன்களுக்கு எதிரான மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்திருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தப்பிரச்சனையை கவனத்தில் எடுத்துக் கொண்டு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

"அம்பேத்கர் திரைப்படம்

தமிழ்நாடு முழுவதும் 300 இடங்களில் "அம்பேத்கர்'


திருநெல்வேலி, ஜன. 2: தமிழ்நாட்டில் சுமார் 300 திரையரங்குகளில் "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்' திரைப்படத்தை திரையிட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் (தமுஎகச) சங்கத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். திருநெல்வேலியில் இம் மாதம் 12, 13 ஆம் தேதிகளில் இத் திரைப்படத்தைப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3-ல் வெளியிடப்பட்ட இத் திரைப்படம் சென்னையில் 10 திரையரங்குகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் 11 திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டது. மற்ற இடங்களில் குறிப்பாக, தென் மாவட்டங்களில் இத் திரைப்படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் எவரும் முன்வரவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பெரும்பாலானவை ஒருசில தனியார் நிறுவனங்கள் வசம் குத்தகைக்கு உள்ளதால், அவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களை மட்டுமே திரையிட அந்த திரையரங்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புறநகர் பகுதிகளிலும், கிராமப்புறங்களில் உள்ள மிகக் குறைவான திரையரங்குகளிலும் மட்டுமே அந்த திரையரங்க உரிமையாளர்கள் விருப்பப்படி திரைப்படங்களைத் திரையிடக்கூடிய சூழ்நிலை உள்ளது.
மேலும், தீபாவளி, புது வருடப் பிறப்பு, பொங்கல் போன்ற தொடர் பண்டிகை காலமாக இருப்பதாலும், கவர்ச்சிமிக்க திரைப்பட நடிகர்களின் திரைப்படங்களைத் திரையிட்டு லாபம் பார்ப்பதிலேயே திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வமாக உள்ளதாலும் "அம்பேத்கர்' போன்ற திரைப்படங்களைத் திரையிட முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இத்தனைக்கும் இத் திரைப்படத்துக்கு தமிழக அரசு நிரந்தரமான வரிவிலக்கும் அளித்துள்ளது.
இது பொதுவான காரணமாகக் கூறப்பட்டாலும், சில மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம்காட்டி இத் திரைப்படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முன்வரவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் சாதிப் பிரச்னையை காரணம்காட்டி இத் திரைப்படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் எவரும் முன்வரவில்லை.
இது ஒருபுறம் இருக்க, தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திடம் தெளிவான கொள்கை முடிவு இல்லாததும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இத் திரைப்படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் தயக்கம்காட்டியதால், திரைப்படத்தின் ஒரு பிரிண்ட்டை விலைக்கு வாங்கி அதை எல்லா இடங்களிலும் திரையிட சில அமைப்புகள் முயன்றபோது தங்களிடம் 2 பிரிண்ட்கள் மட்டுமே உள்ளதாகவும், ஐந்தாறு மாதங்கள் கழித்த பின்னர்தான் விலைக்கு தருவதைப் பற்றி முடிவு செய்ய முடியும் என்றும் திரைப்பட மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் கூறிவிட்டதால் அந்த முயற்சியும் கைகூடவில்லை. மேலும், இத் திரைப்படத்தை திரையிடுவதற்காக அந்த கழகத்துக்கு செலுத்த வேண்டிய கட்டண வரைமுறையிலும் தெளிவான அணுகுமுறை இல்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே, "அம்பேத்கர்' திரைப்படத்தை திரையிட  தமிழ்நாடு முழுவதும் 300 இடங்களில் இத் திரைப்படத்தை திரையிட தமுஎகச முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து தமுஎகச பொதுச்செயலர் ச. தமிழ்ச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை
கூறியதாவது: அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையிட ஏற்பாடு செய்து வருகிறோம். இதற்காக தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தை தொடர்புகொண்டு பேசியுள்ளோம். அதன்படி, திரையரங்குகளை தமுஎகச ஏற்பாடு செய்ய வேண்டும். திரைப்படத்தை நகர்ப்புறத்தில் திரையிட ஒரு காட்சிக்கு ரூ.4,000-மும், கிராமப்புறத்தில் திரையிட ரூ.2,000-மும் திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
ஈரோட்டில் தற்போது இத் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. தேனியில் மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் விரைவில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் பெரியார் தி.க. உதவியுடன் திரையிட ஏற்பாடு செய்துள்ளோம். திருநெல்வேலி பூர்ணகலா திரையரங்கில் இம் மாதம் 12, 13 ஆகிய இரண்டு நாள்களும் திரையிடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமுஎகச மாவட்டச் செயலர் பாஸ்கரன் செய்துள்ளார். திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து திரையிட்டு வருகிறோம். திரையரங்குகளுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளோம்.
ஒரு தேசிய தலைவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இளைய தலைமுறையினர் பார்த்து பயன்பெறும் வகையில் எல்லோரும் இலவசமாகப் பார்க்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஏதேனும் ஒரு காட்சியாவது இத் திரைப்படத்தை திரையிட அரசு உத்தரவிட வேண்டும். இத் திரைப்படத்துக்கு அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட வேண்டும் என்றார் தமிழ்ச்செல்வன்.
நன்றி : தினமணி

வேண்டாம் இலவசம்

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம்.
இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது  அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.

“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து  வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு  முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.


அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!     


BUDDHADEB TO CHIDAMBARAM

Your observation not acceptable: Chief Minister writes to Chidambaram

procession in Jhilimili, Bankura  

Chief Minister’s letter to Union Home Minister

Dear Shri Chidambaram,


I wanted not to open all our correspondences before media but to discuss with you the problems when I meet you in Delhi. Bust as you have already released the correspondence between us to media. I feel compelled to write further on the issues raised by you.


I have noted the reasons behind late arrival of your letter in my office but I cannot accept the deliberate leakage of letters to the Press. I objected to the use of the ward “harmad” for obvious reasons. Unfortunately, you have proposed to replace it with any better word that I may suggest. I am sorry I cannot offer you any such word since I am unable to accept with your attitude towards Left Front workers in our State and also your observation regarding failure of law and order in certain areas.While I share your anxiety on the found situation in Maoist affected areas, I again assure you that our policy is to take appropriate administrative steps against all armed groups who may try to disturb law and order.


The role being by TMC by joining the Maoists and their outfits and now openly organizing public meetings is a dangerous development of which serious note should be taken by your Ministry. You are aware that there are clinching evidence of the encouragement and support that the Maoists are getting from Trinamool Congress. Unfortunately you have chosen not to mention this problem in your letter.The deaths resulting from political clashes clearly show that CPI(M) workers were killed in far greater numbers than TMC supporters. I deeply deplore all deaths in such clashes irrespective of their political affiliations. In no way the violence is justified. I am trying my best to put a stop to such violence. Unfortunately, TMC is not cooperating with the administration in this effort and you are fully aware of this.


I conclude here by saying once again that I will try to go to Delhi as early as possible to meet you and discuss all the related issues.


With regards,


Yours sincerely


Buddhadeb Bhattacharjee

COURTESY : LEFTBENGAL BLOGSPOT

Sunday, January 2, 2011


இதற்கு யார்தான் காரணம்?



வெங்காயத்தின் விலை குறையவில்லை; தக்காளி, பூண்டு விலை குறையவில்லை; சர்க்கரை விலை குறையவில்லை; அரிசி, பருப்பு, கோதுமை விலையும் குறையவில்லை; விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையும் குறையவில்லை!

ஆமாம், 2008-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும், 2009-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தேசிய குற்றப் பிரிவு வழக்குப் பதிவேட்டின்படி தற்கொலைக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள விவரம் இது. 2009-ம் ஆண்டு, பல்வேறு காரணங்களுக்காக 17,368 பண்ணை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டைக்காட்டிலும் 1172 சாவுகள் அதிகம். வேளாண் விளைபொருள்களின் விலை சந்தையில் குறையவில்லை. ஆனால் தற்கொலையும் குறையாது என்றால் எங்கே குறை? இதற்கு யார்தான் காரணம்?
இந்தியா வளரும் நாடாக இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. இங்குள்ள மிகப்பெரும் நுகர்வுச் சந்தைக்காக அமெரிக்க அதிபர் வந்து உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார். சீன அதிபர் வருகிறார். ரஷிய அதிபர் வருகிறார். எல்லோரும் இந்தியாவுக்கு வந்து, இந்தியாவுடன் உறவை மேம்படுத்திக் கொள்கிறார்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்கள். ஆனால், வங்கிக் கடனுக்குக் கையெழுத்திட்ட விவசாயி மட்டும், இந்த நாட்டில் செத்துக் கொண்டிருக்கிறான். என்ன வேதனையான வேடிக்கை!
இந்தத் தற்கொலைப் பட்டியலில் 5 மாநிலங்கள் "பெருமை' சேர்த்துக் கொண்டுள்ளன. அவை: மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்கள். இங்கே முந்தைய ஆண்டைக்காட்டிலும் சராசரியாக 1000 தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது.
இந்த மாநிலங்களை விட்டுத் தள்ளுவோம். தமிழ்நாட்டின் நிலைமை என்ன? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விவசாயிகள் தற்கொலை அதிகம் இல்லை என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் வருத்தம் தரும் புள்ளிவிவரம் என்னவெனில், இந்தத் தற்கொலைகள் இப்போது இரட்டிப்பாகியுள்ளன. 2008-ம் ஆண்டில் 512 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை, 2009-ம் ஆண்டில் 1060 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் விவசாயத் தற்கொலைகள் குறைவு என்று தமிழக அரசு வேண்டுமானால் பெருமை பேசலாம். ஆனால், நிலைமை நன்றாக இல்லை என்பதைத்தான் இப்போதைய இரட்டிப்புச் சாவு எண்ணிக்கை வெளிப்படையாகச் சொல்கிறது.
விவசாயிகள் எண்ணிக்கை கிராமங்களில் குறைந்து வருகிறது. நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இந்நிலையில், இருக்கும் விவசாயிகளும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றால் தமிழகத்தில் யார்தான் விவசாயத்தில் ஈடுபடப்போகிறார்கள்?
கரும்பு விளைவித்தால் விவசாயிக்கு லாபமில்லை. ஆனால் சர்க்கரை ஆலைகள் கோடிகோடியாய் லாபம் அடைகின்றன.
நெல் மூட்டைக்கு கூடுதல் விலை இல்லை. ஆனால் அரிசி மண்டிகள் இப்போதே ஜனவரி மாதத்தில் அரிசிக்கு என்ன விலை என்பதைத் தீர்மானித்து விட்டன. பொன்னி அரிசி தற்போதுரூ.800-க்கு (25 கிலோ) விற்கப்படுவது பொங்கலுக்குப் பிறகுரூ. 1000 என்று தீர்மானித்து, வாடிக்கையாளர்களிடம் இப்போதே வாங்கிக் கொண்டால் பிழைத்தீர்கள் என்று சொல்லவும் செய்கிறார்கள். ஆனால் விவசாயி, மத்தியக் குழுவின் வருகைக்காகவும், அரசின் அறிக்கைக்காகவும் காத்திருக்கிறான். அரசு இழப்பீடு வழங்கினாலும், லஞ்சம் போக அவன் கைக்குக் கிடைப்பது சொற்பமாகத்தான் இருக்கும்.
சிறுஉற்பத்தியான காய்கறிகளில்கூட விவசாயி லாபம் காண முடிவதில்லை. விலையை அவனால் நிர்ணயிக்கவே முடியாது. யாரோ விலையைத் தீர்மானிக்கிறார்கள். வெங்காயம் விலை உயர்ந்தால், கொத்தமல்லி, கறிவேப்பிலைகூட விலை கூடுகிறது. இந்த விலைஉயர்வில் 10 விழுக்காடுகூட விவசாயிக்குப் போய்ச் சேர்வதில்லை. இப்படித்தான் வேளாண் விளைபொருள்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.
இன்றைய தமிழகத்தின் மிகப்பெரும் சவால் பாசன வசதியுடன்கூடிய விளைநிலங்களை அரசியல் பினாமிகள் வாங்கிப் போட்டு விவசாயம் செய்யாமல் தரிசாக வைத்திருக்கிறார்கள். இன்னொருபுறம் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்குப் போதுமான மின்சாரம் கிடைப்பதில்லை. ஜெனரேட்டர் வைத்து நீர்இறைக்கும் சக்தி அனைவருக்கும் கிடையாது. பிறகு எப்படி விவசாயம் நடக்கும்?
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில், விஜயகுமார் என்கிற விவசாயி, தனக்குத் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச டி.வி.யை அமைச்சரிடமே மேடையில் திருப்பிக் கொடுத்துவிட்டு, "விவசாயிக்கு டி.வி. வேண்டாம், குறைந்தது ஒரு மாவட்டத்துக்காவது மின்தடையில்லாமல் செய்யுங்கள்'' என்று கூறியிருக்கிறார். குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச டி.வி. வழங்குவதைக் காட்டிலும் முக்கியத்துவம் தரவேண்டிய பிரச்னைகள், குறிப்பாக விவசாயப் பிரச்னைகள் இருப்பதன் வெளிப்பாடுதான் இந்தச் சம்பவம். அரசு இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மற்றொரு மிகப்பெரும் தவறைத் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. தற்போது குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளில் 75 விழுக்காடு பயனாளிகள் கிராமத்தில் இருக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள்தான். இத்திட்டத்துக்கு இரும்புக் கம்பி, சிமென்டை வழங்கிவிட்டு, அதற்கான தொகை போக மீதித் தொகையை வீடுகட்டியவருக்கும் தருகிறார்கள். ஆனால் இந்தத் தொகையில் வீடு கட்டவே முடியாது என்பதுதான் எதார்த்த நிலைமை.
அரசு குறிப்பிட்டிருக்கும் அளவின்படியே வீடு கட்டினாலும், குறைந்ததுரூ. 1.25 லட்சம் செலவாகிறது. அரசு தரும்ரூ. 75,000க்கு ஆசைப்பட்டு, மீதித்தொகையை கிராமப்புறங்களில் கடன் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பலருக்கு இது சக்திக்கு மீறிய செலவு. அடுத்த இரு ஆண்டுகளில் இந்த வீட்டுக் கடன், வட்டியோடு பூதாகரமாக நிற்கப்போகிறது.
ஏற்கெனவே நஷ்டத்தில் சிக்கியிருக்கும் ஏழை விவசாயிக்கு இந்த வீட்டுக்கடன் பெரும் பிரச்னையாக உருவெடுக்கும்போது, இவர்களைக் காப்பாற்றப் போவது யார்?
"இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயிகள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு' என்று காகிதத்தில் எழுதிப்பிடித்துக் கொள்ளத்தான் வேண்டும். ஏட்டுச் சுரைக்காய்...!



நன்றி : தினமணி