Monday, January 24, 2011

பிரதமரை, காங்கிரஸ் கட்சி வாடகைக்கு எடுத்துள்ளது



பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. மறுபுறம் ரயில்வே சரக்கு கட்டண உயர்வால் டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையும் உயரும் அபாயம் உள்ளது. விலைவாசியை சந்தைதான் தீர்மானிக்கும் என்ற அரசின் தவறான கொள்கையால் விரல்விட்டு எண்ணக்கூடிய சில முதலாளிகள் மட்டுமே பயனடை கின்றனர்.

மத்திய அரசு உள்நாட்டு மக்களை பற்றி கவலைப் படாமல் இந்திய சந்தையை உலகச் சந்தையோடு இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதற்காக உலக வங்கியும், அமெரிக்க முதலாளிகளும் சிபாரிசு செய்த பிரதமரை காங்கிரஸ் கட்சி வாட கைக்கு எடுத்துள்ளது.
டாடா, அம்பானி கம்பெனி முதலாளிகளின் பினாமியாகவே உள்ளார்.
உணவுக் கிடங்குகளில் தேங்கி கிடக்கும் தானியங்களை எலிகளுக்கு தின்னத் தருவோமே தவிர, பசியால் வாடும் இந்திய ஏழைமக்களுக்கு அதிலிருந்து ஒரு பிடிகூட எடுத்துத் தரமுடியாது என்கிறார்.
கருப்பு பணம் ஸ்சுவிஸ் வங்கியில் போட்டுள்ள திருடர்களின் பட்டியலை வெளியிட முடியாது அதை நீதிமன்றம் கூட கேட்க கூடாது என்கிறார்.
முன்று முறை தேர்தலில் ஓட்டுபோடதவர்
தேர்தலில் மக்களை சந்திக்காதவர்
இந்திய குடியுரிமை இல்லாமால் இருந்தவர்
எனவே தான், இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளை பற்றி அறியாமல், ஏழை எளிய மக்களை கண்டு கொள்ளாமல் உள்ளார்.
அனைவருக்கும் இல வசக் கட்டாயக் கல்வி கொடுப் பது என்ற தனது கடமையை அரசு கைகழுவி வருகிறது. காசு இருப்பவர்களுக்கே கல்வி, மருத்துவம் என்று செயல்படுகிறது. அனை வருக்கும் பாதுகாக்கப் பட்ட சுத்தமான குடிநீர் வழங்காததும் இதன் வெளிப் பாடுதான்.

கடுமையான விலையேற்றம், மின்வெட்டு போன்றவை மக்களை கடுமையாக பாதிக்கிறது. விசைத்தறி தொழில் முடங்கிப்போய் உள்ளது. ஆனால் பஞ்சு ஏற்றுமதி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2012ம் ஆண்டிலும் மின்வெட்டு பிரச்சனை தீராது. விலை வாசி உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் கூட வாழ முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. மானியம் கொடுப்பதால் மட்டும் பிரச்சனை தீராது.

சென்னை நகரில் ஆங் காங்கே சாலைகள் தோண் டப்படுவதும், சாலையே இல்லாத தெருவில் நடை மேடை கட்டுவதும் எதனால்? தனது கட்சியின் முன்னணி ஊழியர்களை பணக்காரர்களாகவும், ரவுடி களாகவும் மாற்றும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. அதன்விளைவுதான் சிபிஎம் தலைவர் வெட்டிப்படு கொலை செய்யப்பட்டது.

சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்தால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது. அதனை செய்ய மத்திய அரசு மறுக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் தவறான நடவடிக்கைகள் ஏழை எளிய மக்களை பாதிக் கிறது. மக்களுடைய கோபம் தான் ஆட்சியாளர்களை அடிபணியச் செய்யும்.
நன்றி :  டி.கே.ரங்கராஜன்

No comments:

Post a Comment